மட்டக்களப்பு விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞரும் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடி - புனாணை எனும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று (27.08.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (24.08.2023) மோட்டார் சைக்கிளில் ஓட்டமாவடி நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் 25 வயதான எஸ்.எச்.எம்.அஸாம் எனும் இளம் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த மற்றைய இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று (27.08.2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய புஹார்தீன் நுஸைக் அஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திடீரென பிக்பாஸ் 10வது சீசனில் என்ட்ரி கொடுத்துள்ள சன் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? Cineulagam
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri