நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு சிக்கல்! 3500 பேக்கரிகளுக்கு பூட்டு
எரிவாயு பற்றாக்குறை மற்றும் தரமான கோதுமை மாவு இல்லாததால் பேக்கரி தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் செயலிழந்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் கனடாவிற்குப் பதிலாக சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்தர கோதுமை தானியங்கள் மற்றும் மாவு இறக்குமதியானது பேக்கரி உணவு உற்பத்தியில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தரமான கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan