நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு சிக்கல்! 3500 பேக்கரிகளுக்கு பூட்டு
எரிவாயு பற்றாக்குறை மற்றும் தரமான கோதுமை மாவு இல்லாததால் பேக்கரி தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் செயலிழந்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் கனடாவிற்குப் பதிலாக சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்தர கோதுமை தானியங்கள் மற்றும் மாவு இறக்குமதியானது பேக்கரி உணவு உற்பத்தியில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தரமான கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam