ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி உத்தரவு - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல்வேறு துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம் செய்து அதனை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.
2268/03 என்னும் இலக்கத்தைக் கொண்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மின்சார விநியோகம், வைத்தியசாலைகளில் பராமரிப்பு பணிகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் இதற்கு நிகரான நோயாளிகளைப் பராமரிக்கும் சேவைகள், சிகிச்சை அளித்தல் சேவைகள் உள்ளிட்டன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,



