நாட்டில் மீண்டும் பேரிடியாக மாறவுள்ள மற்றுமொரு பாரிய நெருக்கடி!
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறக்குமதியாளர்கள் அஃப்லாடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததைப் போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் இணைப்பாளரான புத்திக டி சில்வா எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியில்லா சலுகையின் மூலம் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாரிய இலாபத்தை ஈட்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுகர்வுக்கான தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்வதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளதால், தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை.
10,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான அறியப்படாத எண்ணெய் கையிருப்புகளை தேங்காய் எண்ணெய் எனக் கூறி வர்த்தகர்கள் இறக்குமதி செய்துள்ளனர்.தற்போது இலங்கை துறைமுக அதிகாரசபையின் சேமிப்புக் கிடங்குகளில் அவை உள்ளது.
வெளிநாட்டு கையிருப்புகளை வீணாக்காமல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயை வழங்குவதற்கான திறன் உள்ளதாக சங்க உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கு வெளியிடுவதில் இறக்குமதியாளர்கள் வெற்றி பெற்றால் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களால் பொருட்களை விற்பனை செய்ய முடியாது நிலை துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
போர் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை! - சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021