இலங்கையில் நீண்ட நாட்களின் பின்னர் பதிவான கொவிட் மரணங்கள்
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த இரண்டு பெண்
நோயாளர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
நீண்ட நாட்களின் பின்னர் கொவிட் தொற்றினால் குறித்த இரு மரணங்களும் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவருக்கு சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொவிட் மரணம்
இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வோட் தொகுதியில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது கோவிட் தொற்றுநோய் நிலைமை புறக்கணிக்கப்பட்டபோது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri