முல்லைத்தீவில் மேலும் 58 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர் முடிவுகளின் படி 58 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாகப் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 32 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.
மேலும் முல்லைத்தீவு பிரதேசத்தில் 3
பேரும், முள்ளியவளை பிரதேசத்தில் 2 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 32
பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 2
பேரும், மாங்குளம் பிரதேசத்தில் 8
பேரும், மல்லாவி பிரதேசத்தில் 12
பேரும்
உட்பட 58 பேருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.