சிறப்புற இடம்பெற்ற 'செயற்பட்டு மகிழ்வோம்' வருடாந்த திறனாய்வு போட்டி
முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தின் 'செயற்பட்டு மகிழ்வோம்' வருடாந்த திறனாய்வு போட்டி நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு கற்சிலைமடு பண்டாரவன்னியன் கிராமத்தின் நிறைவாழ்வு அபிவிருத்தி மையத்தில் கல்விகற்கும் 300இற்கும் அதிகமான இளையவர்களுக்கு திறனாய்வு போட்டிகள் நேற்றையதினம்(05.06.2025) மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பயிற்றுனர் இரத்தினராசா சகீதரசீலன், கௌரவ விருந்தினராக V. S.யஸ்த்து தலைமை போதகர் மற்றும் இப் பிரதேச பிரதேச சபை உறுப்பினர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு
சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வு அணிநடை இடைவேளை நிகழ்ச்சி வினோத உடைப்போட்டிகள் என்பன சிறப்பாக நடைபெற்றிருந்தன.
பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ்கள், வெற்றிக்கிண்ணம், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
