புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இரண்டாயிரத்து 338 நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இந்த பரீட்சைகள் நடக்கும் காலப் பகுதியில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam