புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இரண்டாயிரத்து 338 நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
இந்த பரீட்சைகள் நடக்கும் காலப் பகுதியில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam