ஐ.எம்.எப்இன் வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது: ரணில் திட்டவட்டம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அது செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு நடத்தினால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிக்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri