கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பெண் : சந்தேக நபர்கள் கைது
கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் வீடொன்றில் வைத்து பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த பெண்ணின் உறவினர் உள்ளிட்ட இருவர் கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல, கொரத்தோட்டை, பட்டியவத்த வீதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உறவினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருபவராகும்.
பெண்ணின் சடலம் மீட்பு
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு 38 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் சந்தேகநபரின் வீட்டிற்கு பழுதுபார்க்க வந்தவராகும்.

இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தாயான அஜந்தா கடுகம்பலா என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயிருந்ததாகவும், சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan