மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று (01) மற்றும் நாளை (02) சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு இடம்பெறும்.
இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும் (CC)பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.