விடுதலைப்புலிகளின் சொத்துகள்: உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட அறிவிப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் எந்த சொத்துகளும் தம்மிடம் இல்லை என தெரிவித்துள்ள உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் வானொலி ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளே எப்படியான தீர்வு தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய எந்தவொரு முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம். தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முக்கிய நடைமுறையாக சர்வகட்சி தலைவர் கூட்டத்தைப் பார்க்கலாம்.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதில் ஒரு சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கிறாரா என்கிற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.