முல்லைத்தீவு வட்டுவாகல் வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்!
முல்லைத்தீவு மாவட்ட நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதன்மை பாலம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மை பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பாலம் புனரமைப்பு

இந்நிலையில் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் இந்த பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்சியாக
கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri