முல்லைத்தீவு வட்டுவாகல் வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்!
முல்லைத்தீவு மாவட்ட நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதன்மை பாலம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மை பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பாலம் புனரமைப்பு

இந்நிலையில் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் இந்த பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்சியாக
கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 21 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam