முல்லைத்தீவு வட்டுவாகல் வீதியில் பயணிப்போருக்கான அறிவித்தல்!
முல்லைத்தீவு மாவட்ட நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதன்மை பாலம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் முதன்மை பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர்செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒரு பகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பாலம் புனரமைப்பு

இந்நிலையில் குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் இந்த பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்சியாக
கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam