கனடாவில் புகலிடம் தேடுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
கனேடிய அரசாங்கத்தின் புதிய சட்டத்தின் படி, கனடாவுக்கு வந்தவர்கள், 14 நாட்களுக்குள் புகலிடம் கோரி விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புகலிடம் கோரி விண்ணப்பிக்காமல் ஒரு வருடத்துக்கும் மேல் கனடாவில் தங்கியிருப்பவர்களுக்கு புகலிடம் கோருவதற்கு தடை விதிக்கப்படும்.
அத்துடன், அவர்கள் கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
எல்லை சட்டங்கள்
மேலும், புகலிடக் கோரிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக குடியமர்வு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், அமெரிக்காவுடனான கனடாவின் பகிரப்பட்ட எல்லையைக் கண்காணிக்க பொலிஸாருக்கும் அதிக அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், எல்லை சட்டங்களை வலுப்படுத்துவதன் மூலம், திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தவும் முடியும் என கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர் லீனா டயப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |