புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Parliament Election 2024
By Rukshy Nov 11, 2024 08:43 AM GMT
Report

பொதுத் தேர்தலைத் (General Election) தொடர்ந்து பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2024.09.24 திகதி 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலிலிருந்து 29 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இதன்படி, அன்றைய தினம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் விசேட நிகழ்வுகளின் தொடர் காரணமாக நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் முதல் நாள் குறிப்பாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், சபைக்குள் முதன்மையான பொறுப்புகள் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாளில் குறிப்பிட்ட இருக்கை ஏற்பாடுகள் ஒதுக்கப்படாததால் அவர்கள் விரும்பும் எந்த இருக்கையிலும் அமர அனுமதிக்கப்படுவார்கள்.

சபையில் சூலாயுதம் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, அன்றைய தினம் முதல் அலுவல்களாக, செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அரசியலமைப்பின் உறுப்புரை 64 (1) மற்றும் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 4, 5 மற்றும் 6 ஆகியவற்றின் படி, சபாநாயகர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உத்தியோகபூர்வ உறுதிமொழி அல்லது உறுதிமொழியை எடுத்துக்கொள்வார்கள்.

தொடர்ந்து, சபாநாயகர் உத்தியோகபூர்வ சத்தியப் பிரமாணம் செய்வார். துணை சபாநாயகர் மற்றும் துணைக்குழு தலைவர் ஆகியோர் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது..!

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது..!

சபாநாயகர் நியமனம்

நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவுசெய்து நியமிக்க முடியும்.

எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமைய தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாரா என்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரை சபாநாயகராகத் தெரிவு செய்யுமாறு முன்மொழிய மற்றொருவர் வழிமொழிய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பங்கள் இரண்டு நாடாளுமன்ற முறைமையில் காணப்படுகின்றன.

அவையாவன, சபாநாயகர் தெரிவு, பிரதிச் சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு போன்றவற்றின் போதும், நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்திலுமாகும்.

வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும்

அவ்வாறான வாக்கெடுப்பின் போது ஐந்து நிமிடங்கள் வாக்களிப்பு மணி ஒலிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதற்காக சபையில் சமுகமளித்திருக்கும் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகரிடமிருந்து வாக்குச்சீட்டொன்று வழங்கப்படும்.

இந்த வாக்குச்சீட்டில் சபாநாயகராகத் தெரிவுசெய்ய விரும்பும் நபரின் பெயர் மற்றும் வாக்களிக்கும் உறுப்பினரின் கையொப்பம் என்பன இடப்பட்டு வெளியில் தெரியாதவாறு மடிக்கப்பட்டு வாக்குப்பெட்டியில் இடவேண்டும். 

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குச்சீட்டில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கையொப்பம் இடப்பட்டிருக்காவிட்டால் அவை செல்லுபடிற்ற வாக்குகளாகக் கணக்கெடுக்கப்படும்.

சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்ற உறுப்பினரின் வாக்குகள் நீக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுவார். 

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

ஐ.எம்.எப் இன் கடனுதவி குறித்து அநுர அரசாங்கத்தை சாடிய மனுஷ

பெயர் அட்டவணை எனும் புத்தகம்

நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட் உறுப்பினர்கள் அனைவரும் முதலாவது நாள் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் அட்டவணை எனும் புத்தகத்தில் கையொப்பமிடுதல் வேண்டும்.

புதிய நாடாளுமன்ற முதல் நாள் அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு | Announcement First Day Session Of New Parliament

இதில் சபாநாயகர் முதன்முதலில் கையொப்பமிடுவார் என்பதுடன், அடுத்து பிரதமர் கையொப்பமிட்டதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிடுவது சம்பிரதாயமாகும். இந்தப் பெயர் அட்டவணைப் புத்தகம் பாதுகாப்பான ஆவணமாகப் பேணப்படும்.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதியினால் அன்றையதினம் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்படுவதாயின், முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்கு வந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்த முடியும்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.  

ராஜ வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகளை வீதிக்கு வர வைத்த பெருந்தோட்ட மக்கள்

ராஜ வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகளை வீதிக்கு வர வைத்த பெருந்தோட்ட மக்கள்

பண மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

பண மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கிளிநொச்சி, Toronto, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கோண்டாவில், London, United Kingdom, சிட்னி, Australia

01 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மட்டக்களப்பு

04 Sep, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், பெல்ஜியம், Belgium

02 Sep, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, செட்டிக்குளம், Brampton, Canada

03 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை, சங்கத்தானை

26 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US