புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
கிராமிய வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட உள்ளூர் சமூகங்களுக்கு மத்தியில் இருந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் சேவைகளை மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை என்பதால், அவர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் தலைநகரில் குறிப்பாக தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri