பயங்கரவாத நிதி பயன்பாடு பட்டியலில் இலங்கை அவதான வலையத்தில்!
பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி பயன்படுத்துதலில் எமது நாடு இன்றும் அவதான வலையத்தில் இருப்பதாக நாடாளுமன்றில் தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், ''பணச்சலவை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பில் எமது நாட்டில் சட்டத்திட்டங்கள் குறைவாகவே இருக்கிறது.
பயங்கரவாத நடவடிக்கை
அதற்கான அவகாசம் இன்றும் இருப்பதாகவே தோன்றுகிறது.பணச்சலவை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் நாங்கள் Gray நிற பட்டியலில் இருக்கிறோம் அது எமக்கு ஆபத்தானதாகும்.
சூதாட்டம் மற்றும் கெசினோ ஆகியவற்றின் மூலம் பணச்சலவை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி மாற்றப்படலாம்.
ஆகையால் 2026 மார்ச் மாதத்தில் இது தொடர்பில் சட்டங்களை ஏற்படுத்தி,நாம் இருக்கும் Gray நிற பட்டியலில் இருந்து வெளியேற உள்ளோம். சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலம் இதற்கும் வழிவகுத்துள்ளது" என்றார்.



