என்ஜியோகிராம் கருவி இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் பெருந்தோட்ட மக்கள்!
இதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதை அறிந்து, இரத்த நாளங்களை எக்ஸ்ரே படங்களின் மூலம் கண்டறிவதற்கு என்ஜியோகிராம் (Angiogram) கருவியைக் கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படுகின்றது.
ஆனால், பெருந்தோட்ட மற்றும் கிராமப்புற மக்கள் பரந்து வாழும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இந்த கருவிகள் இல்லை.
பரிசோதனைக்காக நோயாளர்கள்
இலங்கையில் 42 அரச வைத்தியசாலைகளில் மாத்திரமே இக்கருவிகள் இருக்கின்றன.
இக்கருவியினூடாக செய்யப்படும் பரிசோதனைக்காக நோயாளர்கள் கண்டி அல்லது கொழும்புக்குச் செல்கின்றனர். அவர்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்வாங்கப்பட்டு திகதிகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், அந்த காலம் வருவதற்கு முன்பாகவே அந்த நோயாளர்களில் பலர் உயிரிழந்து விடுகின்றனர்.
கடந்த வாரம் பதுளை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வருகை தந்து, திகதி வழங்கப்பட்ட 36 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இந்த பரிசோதனைகளைத் தனியார் மருத்துவமனைகளில் செய்வதாயின், ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கிறது.
அரசாங்கத்திடம் நிதி இல்லை
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள கண்டி மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளுக்குச் செல்லலாம்.
ஆனால், ஊவா மாகாணம் அப்படியல்ல. நோயைச் சுமந்துகொண்டு நோயாளர்களால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது.
சுமார் 14 இலட்சம் சனத்தொகை கொண்ட இந்த மாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் ஏதாவதொரு வைத்தியசாலைக்கு இக்கருவி மிக மிக அவசரத் தேவையாக உள்ளது.
நாம் பல தடவை சுகாதார அமைச்சின் ஊடாக அரசாங்கத்துக்கு இது குறித்து அறிவித்துவிட்டோம்.
என்ஜியோகிராம் கருவியின் விலை சுமார் 25 கோடியாகும். அக்கருவியைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடினும், எமக்கு அனுமதி அளித்தால், நாம் தனவந்தர்களிடமும் ஏனையோரிடமும் நிதி திரட்டி, இக்கருவியைக் கொள்வனவு செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.
கண்முன்னையே மரணம்
பதுளை பொது வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 20 பேர் வரை இதய நோய் சம்பந்தமான சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழைகள்.
எமது கண்முன்னே நாங்கள் சிகிச்சை வழங்கும் நோயாளர்கள், நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் எமது கண்முன்னையே மரணிப்பதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது.
இந்த கருவிகள் இருந்தால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை எம்மால் காப்பாற்ற முடியும். ஆகவே, அரசாங்கமும் உரியத் தரப்பினரும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் அபிவிருத்திகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், அதைக் காண மக்கள் முதலில் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்றார்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
