விமான படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்: அங்கஜன் எம்.பி கோரிக்கை
இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வடக்கில் விமான படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் (27.02.2024) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வடக்கில் பாதுகாப்பு தேவைகளுக்கு என தேசிய பாதுகாப்பின் கீழ் காணிகளை சுவீகரித்து அதனை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அதன் போது, வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
