விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறித்து அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள தகவல் (Photo)
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300க்கு குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (28.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாத வாடகை அதிகரிப்பு
அந்த அறிக்கையில் மேலும்,
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக 24.07.2023 அன்று அனுப்பி வைத்த கடிதத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
யாழ்ப்பாணத்தின் விவசாய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கான மின்னிணைப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. அவற்றின் மின்மானிகளுக்கான மாத வாடகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
மானிய அடிப்படையில் அறவீடு
எரிபொருள் விலையேற்றத்தால் ஏற்கனவே பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது மின் மானிக்கட்டணத்தாலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே யாழ்ப்பாண பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி விவசாயிகளுக்கான மின்மானி வாடகையை மானிய அடிப்படையில் அறவிடுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடிதம் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
இதன்படி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாய மின்னிணைப்பு பெற்று தற்போது குறித்த விலைக்கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் விபரங்களையும் கோரிக்கையையும் வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவ்விபரங்களை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுசென்று மின்மானிக்கட்டணத்துக்கான மானிய விலைக்குறைப்பை செய்யவும் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
