கையில் பணம் இருந்தாலும் மரக்கறி வாங்க முடியாத நிலை வரும்! சபையில் எச்சரிக்கை
இப்போது 400 ரூபாவிற்கு குறைவாக எந்தவொரு ஒரு கிலோகிராம் மரக்கறியையும் வாங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், விரைவில் கையில் பணம் இருந்தாலும் கடையில் மரக்கறி இல்லாத நிலைமை வரப்போகிறது.
அரசாங்கத்தை கேட்டால் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய்கிறோம், உரம் வந்துள்ளது, கிருமிநாசினி வந்துள்ளது என்று சொல்கிறார்கள்.
ஆனால் விவசாயிகளோ எராளமான பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டு போகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.