கப்பல் உரிமையாளர்களாக மாறி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகள்-வெளிநாடு வாழ் இலங்கையருக்கு பகிரங்க அழைப்பு
கப்பல்களுக்கு உரிமையாளர்களாக மாறி இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாடுகளில் வாழும் செல்வந்த இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.
கப்பல் கூட்டுத்தாபனத்திடம் இரண்டு கப்பல்கள் மட்டுமே இருக்கின்றன
இது சிறந்த முதலீடு. இலங்கை கப்பல் கூட்டுத்தானத்திடம் இரண்டு கப்பல்கள் மாத்திரமே இருக்கின்றன. மேலும் கப்பல்களை கொள்வனவு செய்ய இலங்கையிடம் பணமில்லை.
இலங்கையில் பல்வேறு தொழில்களுக்கு உரிமையாளர்கள் இருக்கின்ற போதிலும் கப்பல் உரிமையாளர்கள் இல்லை. வெளிநாட்டு வங்கிகளில் பெருந்தொகை பணத்தை வைப்புச் செய்துள்ள இலங்கையர்களுக்கு இது சிறந்த சந்தர்ப்பம்.
இலங்கையில் நீர் வழி போக்குவரத்துக்கு மிகப் பெரிய வரவேற்புள்ளது
கப்பல் மாத்திரமல்ல ஏனைய நீர் வழி போக்குவரத்து சாதனங்களை கொள்வனவு செய்து, இலங்கையில் நீர் வழி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும்.இப்படியான நடவடிக்கைகளுக்கு நாட்டின் மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
