குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு
குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் 2021 பெப்ரவரி 03 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று ஷானி அபேசேகர மற்றும் ஏனைய இருவரின் விளக்கமறியலை இரண்டு வாரங்களுக்கு நீடித்துள்ளது.
முன்னாள் காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சியங்களை பொய்யாக முன்னிலைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அபேசேகர கடந்த இரண்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் 2020 நவம்பரில், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி,கல்லெல்ல சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
எனினும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க அபேசேகர பின்னர் முல்லேரியாவாவில் உள்ள தொற்று நோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.