மயிலிட்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழப்பு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி முடக்கப்பட்டது.
மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் 5 பேர் முல்லேரியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவரான மயிலிட்டியை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார பிரிவினரின் கண்காணிப்புடன் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டும் முல்லேரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
முல்லேரியாவில் சுகாதார நடைமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam