இராணுவ வீரரை கைது செய்ய தீவிர விசாரணை
கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் இராணுவ கேர்னல் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் புதையல்
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட ஏழு பேர் கொண்ட குழு ஒன்று வீடு ஒன்றுக்குள் நுழைந்து 1.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் நகைகள் மற்றும் 7 சிம் அட்டைகளை எடுத்துச் சென்றிருந்தது.

வீட்டில் புதையல் தோண்டிய பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து வீட்டை சோதனையிடுவதாக கூறியே கொள்ளை இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளின் போது, இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர். அத்துடன் அவர்கள் கொள்ளைக்காக பயன்படுத்திய இரண்டு சிற்றுந்துகளையும் மீட்டனர்.
கொள்ளை
இந்த நிலையிலேயே இராணுவத்தில் கடமையாற்றும் கேர்னல் ஒருவரே இந்த கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர்களில் ஒருவர் முன்னாள் விமானப்படை வீரர் எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லவாய மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri