மகனுடன் வைத்தியசாலைக்கு சென்ற தாய் காட்டு யானை தாக்கி பலி
தனது மகனுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (50 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த போது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பின்னர் இவர் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மகனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri