பலாலியில் அதிரடி காட்டும் அமெரிக்க விமானம் - சிவப்புக் கம்பளம் விரிக்கும் அநுர - தடுமாறும் இந்தியா..!
இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயலுக்கு பிறகு நாட்டை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாடுகள் கரம் கோர்த்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இந்தியா அதில் முக்கிய பங்காற்றுகின்றன.
நாட்டில் இப்படி ஒரு பேரனர்த்தம் ஏற்பட்ட உடனேயே எமது அண்டை நாடான இந்தியா மீட்பு பணிகளுக்காக முப்படையினருடன் அதிரடியாக களமிறங்கியது.
இதனை தொடர்ந்து, இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும் என உறுதியளித்த இந்தியா தனது பலத்தை காட்டும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதற்கிடையில், அமெரிக்காவின் அதி சக்திவாய்ந்த C - 130 விமானத்தை இலங்கைக்கு அனுப்பிய டொனால்ட் ட்ரம்ப் மீட்பு பணிகளுக்கான நிவாரண நிதியையும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இதற்கு பின்னர், உண்மையில் இலங்கையில் இந்தியாவுக்கான இடம் குறித்து கேள்வி எழும் நிலை ஏற்பட்டுள்ளது எனலாம். இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri