சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் அம்புலன்ஸ் வண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து இன்று (27) 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற 1990 அம்புலன்ஸ் வண்டியும், கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த லொறி ஒன்றும் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 1990 அம்புலன்ஸ் சாரதிக்கும், லொறியின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.