நாடாளுமன்றில் அமளிதுமளி - அமர்வுகள் ஒத்தி வைப்பு
நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டதனை அடுத்து அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானது போது இவ்வாறு குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் எழுந்த குழப்ப நிலைமையே இந்த பதற்ற நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் காரணமாக அவை அமர்வுகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.