பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளிப்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி
பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளி காட்சிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பின் (Colombo) புலனாய்வு ஊடக இணையத்தளம் ஒன்றின் தகவல்படி, சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தவின் வாகனம்
இந்தநிலையில், பொதுமக்களின் இத்தகைய நடவடிக்கைகளை சட்டவிரோதமானதாகவோ அல்லது சட்டத்திற்கு எதிரானதாகவோ கருதக்கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களால் காட்சிப்படுத்தப்படும் காணொளிகள் நாட்டின் சட்டங்களின்படி, குற்றங்கள் மற்றும் சிவில் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என்றும் பதில் பொலிஸ மா அதிபர் கூறியுள்ளார்.
அண்மையில் குருநாகல் -வாரியபொல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) வாகனத்தை காணொளிப்படுத்தியமைக்காக, பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவத்தின் பின்னணியில் பதில் பொலிஸ் மா அதிபரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri