கல்முனை பிராந்தியத்தில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் மூன்றாம் நாளுடன் முடிந்தன - சுகாதார அதிகாரிகள்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கோவிட் தடுப்பூசி நடவடிக்கைகளைக் கடந்த மூன்று தினங்களாக 4 நிலையங்களில் கிராம சேவகர் பிரிவு அடிப்படையில் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் முடிவுற்ற நிலையில் சாய்ந்தமருதில் தடுப்பூசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவரது அறிவித்தலில் சாய்ந்தமருது 6ம், 13ம், 17ம் பிரிவுகளுக்கான மற்றும் தடுப்பூசிகள் பெறத் தவறியவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கைகள் மிக விரைவில் வழங்கப்படும் என்பதுடன் அதற்கான கால அட்டவணைகளும் எமது அலுவலகத்தினால் வெளியிடப்பட்டு பொது மக்களாகிய உங்களுக்கு அறிவிக்கப்படும்.
ஆகவே தடுப்பூசி பெறத் தவறியவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மிக அவசரமாக எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என்பதுடன் தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் திகதி அறிவிக்கப்பட்டதுடன் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த திங்கள் தொடக்கம் வியாழன் வரை 04 நாட்களுக்குக் கிராம அலுவலர் ரீதியாகப் பிரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஏற்பாடாகி தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை வரை இடம்பெற்று வந்த நிலையில், கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் கல்முனை தெற்கு பிரிவில் மறு அறிவித்தல் வரை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதை பொது மக்களுக்கு அறியத்தருகிறேன் எனச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.
இதே போன்றே நிலையே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவிலுள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் நிலவி வருகிறது.








அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
