இலங்கையில் PCR பரிசோதனைகளை பத்தாயிரமாக குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களை அடையாளம் காணும் வகையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் 25 ஆயிரம் PCR பரிசோதனைகளை 10 ஆயிரம் வரை குறைத்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சமூகத்தில் நடமாடும் நபர்களை தேடி பரவலாக நடத்தப்பட்ட PCR பரிசோதனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் பயண கட்டுப்பாடு கடுமையாக முன்னெடுக்கப்படுவதனால் தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்கும் அவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களை அறிந்துக் கொள்வதற்கு இலகுவாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணத்தடையினால் எதிர்வரும் நாட்களில் சாதாகமாக முடிவு ஒன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
