யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
யாழ்.மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்களும் செயலிழந்த நிலையில் மாற்று ஒழுங்கு தொடர்பில் தமக்கு ஏதும் தெரியாது என யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்.மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் 2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான நிலையில் இதுவரை திருத்த நடவடிக்கைகளை எதும் இடம்பெறவில்லை.
மற்றைய தீயணைப்பு வாகனமும் பாழுதடைந்த நிலையில் யாழ்.மாநகர சபை வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் அறிவிப்பு
இவ்வாறான நிலையில் யாழ்.மாநகர சபை பதில் முதல்வர் மாநகர தீயணைப்பு வாகனம் அவசர திருத்த வேலைகள் இருப்பதன் காரணமாக ஒரு வாரத்துக்கு செயல்படாது என அறிவித்திருந்தார்.
பதில் முதல்வருடைய அறிவிப்பு கடந்த வாரத்துடன் நிறைவடைந்த நிலையில் மாநகர தீயணைப்பு வாகனம் செயல் இழந்த நிலையில் காணப்படுகிறது.
தீயணைப்பு பிரிவின் குற்றச்சாட்டு
இது தொடர்பில் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது,
தீயணைப்பு வாகனம் செயலிழந்ததை உறுதிப்படுத்தியதுடன் மாற்று ஒழுங்கு தொடர்பில்
தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
