ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட மூவரும் பிணையில் செல்ல அனுமதி

Temple
By Independent Writer Jan 30, 2021 04:04 AM GMT
Report

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதி வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சம்மந்தமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இன்றையதினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கானது ஆரம்பத்திலே குற்றவியல் சட்ட கோவையின் 106வது பிரிவின் கீழே பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார். இவ்விடமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் சென்ற தடவை நீதிமன்றத்துக்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பிடியாணை இருந்தது என தெரிவித்து இன்று வரை மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள்.

அதற்கு முன்னர் குறித்த மூவரும் பிணையிலே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள். இன்றைய வழக்கில் பொலிஸார் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இதன் போது தொல்லியல் பொருட்களை சேதமாக்கினார்கள் என்ற ரீதியிலும், தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழே ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது சந்தேக நபர்களுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வாதிட்டோம்.

ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.

ஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம்.

அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. இங்கே தொல்பொருள்மிக்கதான மலையை சேதப்படுத்தியது அன்றி மரத்தாலான ஏணியை அப்புறப்படுத்தி விட்டு இரும்பிலான ஏணியை உருவாக்கினார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.

ஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இது சம்மந்தமான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பிரதம அலுவலகத்தில் இருந்து இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் அறிவுறுத்தல் வழங்கிய கடிதமும் உள்ளது.

ஆகவே இந்த ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த போது நீதிமன்றம் அவற்றை பார்வையிட்டு வழக்கு எப்படியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த குறிப்பிடப்பட்ட மரத்திலான ஏணிக்கு யார் சேதத்தை விளைவித்தார்கள் என்பதில் தெளிவில்லை என்றும், கொடுக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் அரசாங்கமே இதனை திருத்தி அமைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது என்பதில் புலனாகுவதன் காரணமாகவும், யார் எவ்வாறான சேதங்களை விளைவித்தார்கள் என்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலே, ஆலய நிர்வாக சபையினர் என்ற காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் சமர்ப்பிக்க முடியாது என்றும், ஆகவே தொடர்ச்சியாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறும் இது அரச அதிகாரிகள் செய்திருந்தாலும் கூட யார் செய்திருந்தார்கள் என்பதனை நீதிமன்றத்திற்கு சரியாக அறிக்கையிடுமாறும், தொல்லியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் இந்த விபரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் குற்றவியல் சட்டக்கோவை 102இன் கீழ் நீதவானுக்கு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தீர்மானித்து குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில்செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதேவேளை வழக்கு நீண்ட திகதி இடப்பட்டு மே மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது ஒரு வழிபாடு சுதந்திரம் தொடர்புடைய விடயம். நீதிமன்றத்திலே நான் சமர்ப்பணங்களை செய்கின்ற போது அரசியல் அமைப்பு 14ம் 01இ கீழ் பூரண சுதந்திரம் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டினேன். தொல்லியல் பெறுமதிமிக்க இடமாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருந்தால் அங்கே வழிபடுவர்கள் செல்வதற்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது.

இல்லை என்றால் எவரும் ருவண்வெலிசாயாவுக்கு போக முடியாது. ஸ்ரீமாபோதிக்கு போக முடியாது, பொலனறுவையில் இருக்கின்ற எந்த புராதான இடங்களிற்கும் போக முடியாது. வழிபடவும் போக முடியாது. ஆகையினால் புராதன இடமாக இருந்தாலும் கூட அது வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற சமர்ப்பணத்தை செய்திருந்தேன்.

அடிப்படை உரிமையை தடுக்கிறதான இந்த செயற்பாட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்த கிழமை தயாரான நிலையில் குறித்த வழக்கு குறுக்கிட்டதன் காரணமாக இந்த வழக்கு விடயங்களையும் அதிலே சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அது தாமதமாகியிருப்பதாக நீதிமன்றத்திலே நான் சொல்லியிருக்கிறேன்.

அந்த ஆவணங்கள் தயாராக இருக்கின்றன. இந்த நீதிமன்றத்தின் கட்டளையையும், வழக்கு நடவடிக்கை கோவை முழுவதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி கிடைத்த பின்னர் அதையும் இணைத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கின்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டு இங்கே வழிபடுவதற்கு தடையேற்படுத்தக்கூடாது என்ற நிவாரணத்தை பெற்றுக்கொடுப்போம்.

இன்றைய நீதிவானுடைய முடிவு எங்களுக்கு பெரும் ஆறுதலைக்கொடுக்கின்றது. ஏனென்றால் தொல்லியல் கட்டளைச்சட்டத்தை தவறாக பிரயோகித்து அதன் கீழே பிணை கொடுக்க முடியாது என்கின்ற ஏற்பாட்டை காரணமாக வைத்து எங்களது பாராம்பரிய வழிபாட்டு தலங்களை முடக்குவதும் அதற்கு பாதகம் விளைவிக்கின்ற இந்த அரசின் செயற்பாட்டிற்கு அதற்கு எதிரான முதற்படியான வெற்றி கிடைத்திருக்கிறது.

ஆகவே ஆலய நிர்வாகத்தினர் சுதந்திரமாக நடமாட முடியும். அதுதான் எங்களது பிரதான நோக்கமாக இருந்தது. அதிலே நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆதிலிங்கேஸ்வரர் விடயத்திலே வழிபட விரும்புபவர்கள் எவரும் வழிபடக்கூடிய வகையிலே சட்டத்தின் துணையோடு அதனை உறுதி செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், அன்டன் புனிதநாயகம், குரூஸ் உட்பட சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US