வடக்கில் தனியார் பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்(Video)
யாழ்ப்பாண புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஆராய்ந்துள்ளனர்.
இரண்டு மாத காலப்பகுதிக்குள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளும் சேவையாற்ற வேண்டும்.
தீர்மானம்
அவ்வாறு சேவையாற்ற தவறினால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் தனியார் பேருந்துகள் அனைத்தும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுமென யாழ்.மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேருந்து உரிமையாளர்கள் கலந்துரையாடிய போதே மேற்படி தீர்மானம் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
