ஊரடங்கு நேரத்திலும் மருந்தகங்கள் திறந்திருக்கும்!
ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அனைத்து மருந்தகங்கள் மற்றும் செவிலியர் இல்லங்கள்(நேர்ஷிங் ஹோம்ஸ்) இரவு 7.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அவசரத் தேவைகள் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது அரசாங்க ஏற்பாட்டுக்குழுக்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னர், நாடளாவிய ரீதியாக ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam