பேருந்துக் கட்டணங்களும் அதிகரிக்கலாம்..
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பேருந்து போக்குவரத்துடன் தொடர்புடைய சங்கங்கள் அனைத்தும் இன்று(2) அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.
கடந்த நாட்களில் ஆரம்பத்தில் 12 ரூபா மற்றும் பின்னர் 24 ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது.
திடீர் கலந்துரையாடல்
அதன் காரணமாக பேருந்துகளின் ஆரம்பக்கட்டணம் தொடக்கம் அனைத்துக் கட்டணங்களையும் அதிகரிக்க அனுமதி கோரி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.

எனினும் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது. இந்நிலையில் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பேருந்து போக்குவரத்துடன் தொடர்புடைய அனைத்து சங்கங்களும் இன்று திடீர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.
பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சங்கங்களின் நிலைப்பாடாக உள்ளது.