இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்
எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேருக்கும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு விசைப்படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேர் நேற்று இரவு குதிரைமலைப் பகுதியில் வைத்து கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல் உத்தரவு
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, நேற்று மாலை புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் அடுத்த வழக்கை கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னெடுக்குமாறும் நீதவான் இவோனா விமலரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam