ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள அலி சப்ரி
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
2022 செப்டெம்பர் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் 77வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் இன்று அமெரிக்கா செல்லவுள்ளார்.
அமெரிக்கா விஜயம்
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட சில நாட்களிலேயே அவர் அமெரிக்கா செல்கிறார்.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை மீது பொருளாதார
குற்றங்களை சுமத்திய போது, வெளியுறவு அமைச்சர் அதை நிராகரித்திருந்தார்.