பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கண்டி - அலவத்துகொடையில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையிலிருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுகா மதுவந்தி என்ற 26 வயது இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதைந்திருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில் வயல் பகுதியில் புதைந்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கடந்த சனிக்கிழமை (11.03.2023) மீட்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.