உயர்தரத்தில் சாதித்த மாணவி உருக்கம்
பாடசாலையில் இருந்து இடைவிலகிய அண்ணாவினாலேயே நான் இந்த நிலையை அடைந்தேன் என உயிர் முறைமை தாெழில்நுட்ப பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி ச.ருக்சிகா தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சையில் உயிர்முறைமை தொழில்நுட்பப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியாகியுள்ளன.
அதில் உயிர்முறைமை தொழில் நுட்பப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சந்திரசேகரன் ருக்சிகா 2ஏபி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 134 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவர் தனது பெறுபேறு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“எனது பாடசாலை அதிபர் மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். எந்த நேரத்தில் நாம் சந்தேகங்களை கேட்டாலும் ஆசிரியர்கள் எமது சந்தேகங்களை தீர்த்து வைத்தனர்.
அதனால் தான் இந்த இடத்தில் நிற்கின்றேன். வேறு மாெழி பரீட்சை வினாத்தாள்களையும் ஆசிரியர்கள் கற்பித்தனர். பெற்றாேரின் ஆதரவும் முக்கியமானது.
எனது அப்பா விவசாயம் தான் செய்கிறார். என்னை சாதாரண தரத்தில் இருந்து படிக்க வைத்தது எனது அண்ணா தான்.
அண்ணா சாதாரண தரத்துடன் தனது படிப்பை நிறுத்திக் காெண்ட பாேதும் நான் படிக்க வேண்டும் என நினைத்து வேலைக்கு பாேய் என்னை படிக்க வைத்தார்.
அண்ணா இல்லை எனில் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன். அண்ணாவுக்கு நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam