அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல்கள்! அல் கொய்தாவின் மூத்ததலைவர் பலி
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் அல் கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்ற சிரிய அரசப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் சிரியாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர்களில் ஒருவரான அப்துல் ஹமீத் அல்-மாதர் கொல்லப்பட்டதாக பென்டகன் இன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தலைமையிலான கூட்டணியால் பயன்படுத்தப்பட்ட தெற்கு சிரியாவில் உள்ள
தளம் ஒன்று தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல்
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.