உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்
2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
உயர்தர பரீட்சை
இவர் வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப் பெற்றுள்ளார்.
05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவனின் ஆசை
இதேவேளை தெவும் சனஹஸ் ரணசிங்க 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போது சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்துள்ளார்.
சாதாரணதர பரீட்சையில், அவர் 5 A , 2 B மற்றும் ஒரு C தேர்ச்சி பெற்றுள்ளார்.
தெவும் சனஹஸ் ரணசிங்க, சட்டத்தரணி மற்றும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே அருடைய இலட்சியம் என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
