சாய்ந்தமருது என்ற ஊரை உலகறிய செய்தவர்கள் சஹ்ரான் குழுவினர்: அஜித் ரோகண
சாய்ந்தமருது என்ற பிரதேசத்தை உலக நாடுகள் முழுவதும் அறிய செய்தவர்கள் சஹ்ரான் குழுவினர் என கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலாநிதி சட்டத்தரணி அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு விழாவிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
மேலும் அவர் தெரிவித்ததாவது,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சாய்ந்தமருது என்ற ஊரை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.
இன்று நாங்கள் இணையத்தின் ஊடாக கூகுள் சாய்ந்தமருது என்ற சொல்லை தட்டச்சு செய்தால் உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியும்.
இதற்கு காரணம் சாய்ந்தமருது பகுதியில் ஸஹ்ரான் குழுவினர் மறைந்திருந்த செயற்பாடும் அங்கு இடம்பெற்ற தாக்குதலுமாகும்.
அத்துடன், முஸ்லிம்களினால் ஓதப்படும் குர்ஆனில் எங்கேயாவது தற்கொலை செய்வது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கேட்க விரும்புகின்றேன்.
மேலும், சில அடிப்படை வாதிகள் குர்ஆனில் குறிப்பிடப்படாத சில விடயங்களை திணித்து மார்க்க விடயங்களை பிழையாக வழிநடத்த முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.
இந்த குழுவினர்களிடம் இருந்து சிறுவர்கள் இளைஞர்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
மேற்குறித்த நபர்களிடம் இருந்து எமது சமூகத்தை நாங்கள் பாதுகாக்க முன்வர வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும்.
இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்காகவே நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களில் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பணியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
