சிரியாவில் வான்வெளி தாக்குதல் - துறைமுகத்தின் மீது பல ஏவுகணைகள் வெடித்து சிதறியதாக தகவல்
சிரியாவில் பெரும்பாலான இறக்குமதிகள் நடைபெற்று வரும் மிக முக்கிய துறைமுகத்தில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அரச படைகளும், கிளர்ச்சியாளர்களுக்கு மிடையில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிரியாவில் உள்ள துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் கடற்கரை நகரமான லதா கியாவில் உள்ள துறைமுகம் மீது இன்று அதிகாலை இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி உள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,