ரயிலும் வானும் விபத்துக்கு உள்ளானதில் விமானப்படை வீரர் பலி
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
ரயிலும் விமானப்படைக்கு சொந்தமான வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மற்றுமொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.33 அளவில் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்ததுடன் விமானப்படை வான், கடற்கரையில் இருந்து காலி வீதி நோக்கி செல்வதற்காக ரயில் கடவை கடக்க முயன்ற போது ரயில், வான் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
