ரயிலும் வானும் விபத்துக்கு உள்ளானதில் விமானப்படை வீரர் பலி
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளார்.
ரயிலும் விமானப்படைக்கு சொந்தமான வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மற்றுமொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் மொனராகலை புத்தல பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.33 அளவில் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்ததுடன் விமானப்படை வான், கடற்கரையில் இருந்து காலி வீதி நோக்கி செல்வதற்காக ரயில் கடவை கடக்க முயன்ற போது ரயில், வான் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விமானப்படை வீரர்கள் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri

விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
