காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன உமிழ்வு சோதனை மையம், இலங்கையில் காற்றின் தரம், மிதமான அளவிற்கு மோசமடைவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக காற்று மாசுபாட்டால் உணர்திறன் உள்ளவர்கள், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அதிகபட்ச காற்று மாசுபாடு
ஆய்வுகளின்படி, காலி மற்றும் இரத்தினபுரியில் சற்று ஆரோக்கியமற்ற காற்றின் தர நிலை பதிவாகியுள்ளது.
காற்றின் தரக் குறியீடு (AQI) நாள் முழுவதும் 64 முதல் 108 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது,
இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிக்கிறது.
காலை 7:30 - 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 - 2:00 மணி வரை அதிகபட்ச காற்று மாசுபாடு அளவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒப்பீட்டளவில், அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை, ஓபனாக கூறிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை... என்ன இப்படி சொல்லிட்டாங்க Cineulagam

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
