கொழும்பில் மோசமடைந்துள்ள காற்றின் தரம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முற்பகல் 11.30 மணியளவில், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.
கொழும்பின் காற்றின் தர மதிப்பு 135 அலகுகள் என்று நிறுவனம் கூறியுள்ளது.
பதிவாகியுள்ள காற்றின் தர மதிப்பு

மேலும், கம்பஹா நகரத்தின் காற்றின் தர மதிப்பு 130 அலகுகளாகவும், யாழ்ப்பாண நகரம் 128 அலகுகளாகவும், கொழும்பு பத்தரமுல்லை மேற்குப் பகுதியில் 121 அலகுகளாகவும் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், காற்றின் தரக் குறியீட்டிற்கமைய, 101-150 அலகுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுவாச பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணிந்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam