நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா! விரைந்து செயற்பட்ட விமானி
சுமார் 1000 அடி உயரத்தில் 184 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் திடீரென தீ பற்றியதால் விமானம் மீண்டும் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி 184 பயணிகளுடன் கிளம்பியுள்ளது.

விமானம் புறப்பட்டு 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
டிடி வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது, மிகப்பெரிய வலி... எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா ஓபன் டாக் Cineulagam
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam