சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டிய தேவை: பேராசிரியர் இந்திக
சுகாதாரத் துறையின் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிஜமாகிய செயற்கை நுண்ணறிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு இப்போது நிஜமாகிவிட்டது. அதை புறக்கணிக்க முடியாது. செயற்கை நுண்ணறிவால் சுகாதாரத் துறைக்கும் மருத்துவக் கல்விக்கும் பல நன்மைகள் உள்ளன.
இது புறக்கணிக்கக்கூடிய ஒன்றல்ல. மருத்துவத்தின் தரத்தை அதிகரிக்க, சுகாதார சேவைகளின் செயல்திறன் மற்றும் தரம் என்பன கட்டாயமாகும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், தகவல்களின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் பற்றிய அறிவை ஒரு நபர் பெறுவது கடினம். அப்படிப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் மிகுந்த பலன் கிடைக்கும்.
சுகாதார சேவை
இலங்கையில் சுகாதார சேவைகள் மற்றும் அது தொடர்பான சேவைகளில் பயன்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவின் பலன் மிகப் பெரியது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரோபோடிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செயற்கை நுண்ணறிவின் கீழ் நாங்கள் சேவைகளை வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
